×

வாய்க்காலில் வாலிபர் சடலம் மீட்பு

 

ஈரோடு, அக்.23: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே மேற்குப்பதி, அய்யன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (58). இவரது மகன் கவியரசு (29). கடந்த 10-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்ற கவியரசு அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, தந்தை சுப்பிரமணியம், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே உள்ள பாலக்குட்டப்பாளையம் பகுதியில், கீழ்பவானி வாய்க்கால் கரையில், கடந்த 20ம் தேதி வாலிபர் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து, அனைத்து காவல் நிலையங்களுக்கும் அளிக்கப்பட்ட தகவலின் பேரில், கவியரசுவின் தந்தை சுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு சென்று, சடலமாக மீட்கப்பட்டது தனது மகன் கவியரசுதான் என அடையாளம் காட்டினார். மேலும், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி நேற்று முன்தினம் அவர் அளித்த புகாரின் பேரில், வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வாய்க்காலில் வாலிபர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Subramani ,Aiyan Totam ,West Pathi ,Gunnathur, Tirupur District ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது